நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 3 டன் மலர்களால் சிறப்பு அபிஷேகம்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 3 டன் பூக்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 3 டன் பூக்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அதிகாலை 3.30 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு வடை மாலை சாத்துபடி செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சனம், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், நிறைவாக கனகாபிஷேகமும் நடந்தது.
What's Your Reaction?