நவராத்திரி விழா: சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரத்துக்கு புறப்பாடு - கேரள ஆளுநர் இன்று எல்லையில் வரவேற்கிறார்
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, குமரி மாவட்டத்திலிருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பாடை முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில், மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, குமரி மாவட்டத்திலிருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பாடை முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில், மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருவனந்தபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய 3 சுவாமி விக்ரகங்கள், பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.
What's Your Reaction?