நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: கைதான கேரள தொழிலதிபருக்கு ஐகோர்ட் ஜாமீன்

மலையாள நடிகை ஹனி ரோஸ்  கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைதாகி நீதிமன்ற காவலில் இருக்கும் கேரள தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Jan 15, 2025 - 14:50
 0  4
நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: கைதான கேரள தொழிலதிபருக்கு ஐகோர்ட் ஜாமீன்

திருவனந்தபுரம்: மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைதாகி நீதிமன்ற காவலில் இருக்கும் கேரள தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் உருவக்கேலிக்கு எதிராக கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பான வழக்கினை விசாரித்த வந்த உயர் நீதிமன்ற நீதிபதி, "நமது சமூகத்தில் உருவக்கேலி என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது. ஒருவரின் உடல் குண்டாக, ஒல்லியாக, குள்ளமாக, உயரமாக, கருப்பாக இருப்பதாக கேலி செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். நாம் எல்லோரிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது.நாம் அனைவரும் முழுமையானவர்கள் இல்லை. இந்த வாழ்க்கையில் நமது உடல் மாறும், மனம் மாறும், நமது இதயமும் மாறும். ஆண்களானாலும், பெண்களானாலும் அடுத்தவர் குறித்து கருத்து கூறும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow