தை அமாவாசை: ராமேசுவரம், ஸ்ரீரங்கம், பவானியில் புனித நீராடி முன்னோருக்கு திதி கொடுத்த மக்கள்

தை அமாவாசையையொட்டி ராமேசுவரம், ஸ்ரீரங்​கம், பவானி உள்ளிட்ட பல்வேறு நீர்​நிலைகளில் லட்சக்​கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர்.

Jan 30, 2025 - 00:55
 0  3
தை அமாவாசை: ராமேசுவரம், ஸ்ரீரங்கம், பவானியில் புனித நீராடி முன்னோருக்கு திதி கொடுத்த மக்கள்

ராமேசுவரம் / திருச்சி / ஈரோடு: தை அமாவாசையையொட்டி ராமேசுவரம், ஸ்ரீரங்​கம், பவானி உள்ளிட்ட பல்வேறு நீர்​நிலைகளில் லட்சக்​கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயி​லில் நேற்று அதிகாலை நடைதிறக்​கப்​பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பகல் 12 மணியள​வில் அக்னி தீர்த்தக் கடற்​கரை​யில் ராமர், சீதா, லட்சுமணர் பஞ்சமூர்த்தி​களுடன் எழுந்​தருளி பக்தர்​களுக்கு தீர்த்​தவாரி வழங்கி அருள்​பாலித்​தனர். மாலை​யில் மண்டகப்​படி​யில் தீபாராதனை, இரவு கருட வாகனத்​தில் சுவாமி, அம்பாள் புறப்​பாடு நடைபெற்​றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow