திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர்.

Oct 22, 2025 - 18:35
 0  3
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர்.

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்.22-ம் தேதி தொடங்கி அக்.28-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனையொட்டி முதல் நாளான இன்று காலையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow