“தொடரும் எனது பயணம்...” - ‘பைசன்’ நிஜ நாயகன் மணத்தி கணேசன் உத்வேகப் பகிர்வு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தி என்ற கிராமத்தை சேர்ந்த பி.கணேசன் (55) என்பவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி இருக்கிறது இந்தத் திரைப்படம்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்து மக்கள் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பைசன்’. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தி என்ற கிராமத்தை சேர்ந்த பி.கணேசன் (55) என்பவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி இருக்கிறது இந்தத் திரைப்படம்.
பிரபல கபடி வீரரான மணத்தி பி.கணேசன் 1994-ல் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, 1995-ல் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜூனா விருதை பெற்றுள்ளார். கபடி விளையாட்டுக்காக மணத்தி கணேசன் சந்தித்த சவால்கள், இன்னல்கள், அவரது வெற்றிப் பயணங்களை தனது திரை மொழியில் காட்டியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
What's Your Reaction?