திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலம்: காவடிகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்: அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிக் கிருத்திகை திருவிழா, கடந்த 14-ம் தேதி ஆடி அஸ்வினி விழாவோடு தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆடிக் கிருத்திகை திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி அளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷே கம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தங்கவேல், தங்க கீரிடம், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல், காவடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவருக்கு தீபாராதனை நடைபெற்றது.
What's Your Reaction?