“தமிழர் கலாச்சாரத்தை போல் சிறப்பானது ஜல்லிக்கட்டு!” - அலங்காநல்லூரில் வெளிநாட்டினர் புகழாரம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழர் கலாச்சாரம் சிறப்பானது என பெருமையாக கூறினர்.

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் "தமிழர் கலாச்சாரம் சிறப்பானது" என பெருமையாகக் கூறினர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இந்தாண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். இந்த ஆண்டு பிரான்ஸ், அமரிக்கா, மலேசியா. இலங்கை, ஸ்பெயின், ஆஸ்திரேலிய, தைவான், இஸ்ரேல், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்தனர்.
What's Your Reaction?