தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்டில் ரூ.63,339 கோடி வரி வசூல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25-ம் நிதியாண்டில் ரூ.63,339 கோடி வரி வசூலாகியுள்ளதாக, ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் ஏ.ஆர்.எஸ்.குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25-ம் நிதியாண்டில் ரூ.63,339 கோடி வரி வசூலாகியுள்ளதாக, ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையர் ஏ.ஆர்.எஸ்.குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1-ம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மண்டலம் சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி தினம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமை ஆணையர் ஏ.ஆர்.எஸ்.குமார் தலைமை தாங்கினார். முன்னாள் முதன்மை ஆணையர் ராம் நிவாஸ் முன்னிலை வகித்தார்.
What's Your Reaction?