தமிழகத்தில் தினசரி பால் கொள்முதலை உயர்த்த அமைச்சர் அறிவுறுத்தல்
தினசரி பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அனைத்து மாவட்ட பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

சென்னை: தினசரி பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அனைத்து மாவட்ட பொது மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இன்று 27.02.2025 சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உள்ள பொது மேலாளர்கள் மற்றும் இணையத்தில் உள்ள அனைத்து துறைத் தலைவர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர், அனைவரையும் வரவேற்று ஆய்வுக்கூட்டத்தில் ஆய்வு பொருளை எடுத்துரைத்து பால்வளத்துறை அமைச்சரை ஆய்வு செய்திட கேட்டுக்கொண்டார்.
What's Your Reaction?