தமிழக நகர்ப்புற உள்ளாட்சிகளில் சுயசான்று அளிக்கப்படாத குடியிருப்பு அனுமதிக்கான கட்டணம் நிர்ணயம்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சுய சான்றளிக்கப்படாத குடியிருப்பு மற்றும் இதர கட்டிடங்களின் அனுமதி மற்றும் பாதாள சாக்கடை திட்ட வைப்புத் தொகை ஆகியவற்றை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சுய சான்றளிக்கப்படாத குடியிருப்பு மற்றும் இதர கட்டிடங்களின் அனுமதி மற்றும் பாதாள சாக்கடை திட்ட வைப்புத் தொகை ஆகியவற்றை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒற்றைச் சாளர முறையில், கட்டிட அனுமதியை எளிமையாக்கும் வகையில், 2500 சதுரடி வரை பரப்பிலான நிலத்தில் 3500 சதுரடி வரையிலான தரைதளம் மற்றும் முதல் தளம் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் இணையவழி கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டணங்களும் புதிதாக நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி, தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
What's Your Reaction?