தடைகளை உடைத்து சாதனை: இந்தோனேசியாவில் கஃபே நடத்தும் இஸ்லாமிய பெண்ணின் உத்வேகக் கதை
சுனாமி, நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கும், எரிமலை வெடிப்பு போன்ற பேரழிவுகளுக்கு பெயர் போன நாடுதான் இந்தோனேஷியா. குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் சில விதிகளை அமல்படுத்துகிறது. பெண்கள் வேலை செய்ய தடையில்லை என்ற சட்டம் இருந்தாலும், காபி, டீ கடை நடத்துவது ஆண்களின் வேலையாக பார்க்கப்படுகிறது.

சுனாமி, நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடிப்பு போன்ற பேரழிவுகளுக்கு பெயர் போன நாடுதான் இந்தோனேசியா. குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் சில விதிகளை அமல்படுத்துகிறது. பெண்கள் வேலை செய்ய தடையில்லை என்ற சட்டம் இருந்தாலும், காபி, டீ கடை நடத்துவது ஆண்களின் வேலையாக பார்க்கப்படுகிறது.
பழமைவாதம் மிகுந்த இந்தோனேசியாவின் இந்த மாகாணத்தில் பெண்களால் நடத்தப்படும் ஒரே கஃபே `மார்னிங் மாமா’ (Morning Mama) ஆகும். 28 வயதான குர்ராதா, `1,001 காபி கடைகளின் நகரம்’ என்று அழைக்கப்படும் பண்டா ஆச்சே நகரில், பெண்களுக்கு வசதியாக ஒரு கடையை உருவாக்குவதற்காக கடந்த ஆண்டு `மார்னிங் மாமா’ (Morning Mama) கஃபேவை திறந்தார். பெண்களுக்கு வசதியான ஒரு கஃபேவை ஏன் திறக்கக்கூடாது என்று நான் நினைத்தேன். அந்த கேள்விதான் தற்போது ஒரு விடையாக மாறியுள்ளது என்றார். ஆச்சேவின் பிரபலமான காபி கடையின் உரிமையாளர் ஹஜ்ஜி நவாவி, பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டோம் என்று கூறியதையும் குர்ராதா சுட்டிக்காட்டினார்.
What's Your Reaction?