‘ஜோரா கைய தட்டுங்க’ படம் எப்படி? - ஒரு கை ஓசை
மேஜிக் நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும்போதே இறந்து விடுகிறார் யோகி பாபுவின் அப்பா. தந்தை வழியில் அதே கலையைத் தன் வாழ்வாதாரமாக எடுத்துக்கொள்கிறார்

மேஜிக் நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும்போதே இறந்து விடுகிறார் யோகி பாபுவின் அப்பா. தந்தை வழியில் அதே கலையைத் தன் வாழ்வாதாரமாக எடுத்துக்கொள்கிறார். ஆனால், அதில் பாதிக் கிணறுகூட தாண்டாமல் நிகழ்ச்சிகளில் சொதப்புகிறார். ஆறுதலாக, யோகி பாபுவின் திறமை மீது நம்பிக்கை வைக்கிறார் ஒரு பெண்.
அதைக் கண்டு குமுறும் சில அடாவடி இளைஞர்கள், யோகிபாபுவின் ஒரு கையை வெட்டிவிடும்படி கூலிப்படை முரடர்களை அனுப்புகிறார்கள். அப்போது காயத்துடன் தலைமறைவாகும் யோகிபாபு, மேஜிக் கலையை வைத்தே தன்னைத் துன்புறுத்தியவர்களுக்கு எப்படிப் பாடம் புகட்டினார் என்பதுதான் ‘ஜோரா கையத் தட்டுங்க’ படத்தின் கதை.
What's Your Reaction?