ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!

வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறையும் என்றும்,  காகிதம் மீதான வரி 18 சதவிகிதமாக உயர்வதால் காலண்டர்கள் விலை அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்

Sep 5, 2025 - 19:15
 0  19
ஜிஎஸ்டி 2.0 தாக்கம்: நோட்டு புத்தகங்கள் விலை குறையும்; காலண்டர், டைரி விலை உயரும்!

சிவகாசி: மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங் களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி தற்போது முற்றிலும் நீக்கப்பட்டு, வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை குறையும் என்றும், காகிதம் மீதான வரி 18 சதவிகிதமாக உயர்வதால் காலண்டர்கள் விலை அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

சிவகாசியில் உள்ள 150-க்கும் அதிகமான அச்சகங்களில் சீசன் அடிப்படையில் நோட்டுப் புத்தகங்கள், பள்ளி பாடப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 70-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் பிரத்தியேகமாக நோட்டுப் புத்தகங்கள் உற்பத்திப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதில் 20 முதல் 320 பக்கங்கள் வரை பல்வேறு வடிவங்களில் நோட்டுப் புத்தகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பேப்பர் விலை குறைவால் நோட்டுப் புத்தகங்களின் விலை 10 சதவீதம் வரை குறைந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow