இந்திய ஜவுளித் துறை இனி..? - ஜிஎஸ்டி 2.0 தாக்கம் பகிரும் திருப்பூர் தொழில் துறையினர்
ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை, இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் உலக சந்தையில் போட்டியிடும் தன்மையை மேலும் வலுப்படுத்தி, புதிய உயரங்களை எட்டுவதற்கு உதவும் என திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்

திருப்பூர்: ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை, இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் உலக சந்தையில் போட்டியிடும் தன்மையை மேலும் வலுப்படுத்தி, புதிய உயரங்களை எட்டுவதற்கு உதவும் என திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த விரிவான விவாதங்கள் நடந்தன.
What's Your Reaction?