ஜி20 உச்சிமாநாடு - உறவை வலுப்படுத்த உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஜி20 மாநாட்டின் இடையே இத்தாலி, இந்தோனேசியா, நார்வே, போர்ச்சுகல், எகிப்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

Nov 19, 2024 - 14:15
 0  3
ஜி20 உச்சிமாநாடு - உறவை வலுப்படுத்த உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ரியோ டி ஜெனிரோ: ஜி20 மாநாட்டின் இடையே இத்தாலி, இந்தோனேசியா, நார்வே, போர்ச்சுகல், எகிப்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தனது இரண்டு நாள் நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17, 2024) பிரேசில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, திங்களன்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியைச் சந்தித்து, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow