ஜல்லிக்கட்டு: 6-வது ஆண்டாக கன்றுடன் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ‘காங்கயம்’ பசு வழங்கிய இளைஞர்!
நாட்டினக் காளை வளர்ப்பை ஊக்குவிக்க, பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு சிறப்பு பரிசாக மதுரை இளைஞர் ஒருவர் 6-வது ஆண்டாக கன்றுடன் கூடிய ரூ.1 லட்சம் மதிப்புள்ள ‘காங்கயம்’ பசு பரிசு வழங்கியுள்ளார்.

நாட்டினக் காளை வளர்ப்பை ஊக்குவிக்க, பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு சிறப்பு பரிசாக மதுரை இளைஞர் ஒருவர் 6-வது ஆண்டாக கன்றுடன் கூடிய ரூ.1 லட்சம் மதிப்புள்ள ‘காங்கயம்’ பசு பரிசு வழங்கியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு, ஜல்லிக்கட்டுக்கும், நாட்டினக் காளைகளுக்கும் தனி மவுசு ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது நாட்டின காளைகள் வளர்ப்பு அதிகரித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற அலங்காநல்லூரை சேர்ந்த பொன்குமார் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால், அந்த போராட்டத்துக்குப் பிறகு நாட்டினக் காளைகள் வளர்ப்பை ஊக்குவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
What's Your Reaction?