செர் அமி: போர்க்களப் புறா! | வரலாறு முக்கியம் மக்களே! - 06
‘இங்கே பலரும் காயம் அடைந்துள்ளோம். வெளியேற முடியாதபடி சிக்கிக் கொண்டிருக்கிறோம்.’ – இப்படி ஒரு செய்தியை எழுதி, புறா ஒன்றின் காலில் கட்டினர். நேரம் பார்த்து அதைப் பறக்கவிட்டனர். எதிரிகளின் துப்பாக்கிகள் விழித்திருந்தன. அந்தப் புறா, தரையில் வீழ்ந்து மடிந்தது.

‘இங்கே பலரும் காயம் அடைந்துள்ளோம். வெளியேற முடியாதபடி சிக்கிக் கொண்டிருக்கிறோம்.’ - இப்படி ஒரு செய்தியை எழுதி, புறா ஒன்றின் காலில் கட்டினர். நேரம் பார்த்து அதைப் பறக்கவிட்டனர். எதிரிகளின் துப்பாக்கிகள் விழித்திருந்தன. அந்தப் புறா, தரையில் வீழ்ந்து மடிந்தது.
இரண்டாவது புறாவின் மூலமாகவும் செய்தி அனுப்ப முயற்சி செய்தனர். அதுவும் எதிரிகளின் தோட்டாக்களுக்குத் தப்பவில்லை. இன்னும் எஞ்சி இருப்பது ஒரே ஒரு புறாதான். அதுவும் வீழ்த்தப்பட்டால், அங்கே சிக்கியிருக்கும் இருநூற்றுச் சொச்ச ராணுவ வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மேஜர் சார்லஸ் வைட் விட்லெஸி, பெரும் குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தார்.
What's Your Reaction?