சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்; பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
தைப்பூசத் திருவிழாவையொட்டி சென்னை வடபழனி, கந்தகோட்டம், அயப்பாக்கம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சென்னை: தைப்பூசத் திருவிழாவையொட்டி சென்னை வடபழனி, கந்தகோட்டம், அயப்பாக்கம் உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வடபழனி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி யெழுச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பால் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
What's Your Reaction?