குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்

தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரன்​பட்​டினம் முத்​தா​ரம்​மன் கோயி​லில் பிரசித்தி பெற்ற தசரா திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

Sep 24, 2025 - 01:45
 0  3
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரன்​பட்​டினம் முத்​தா​ரம்​மன் கோயி​லில் பிரசித்தி பெற்ற தசரா திரு​விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. இதையொட்​டி, பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் காப்பு கட்டி வேடமணிந்​தனர். முக்​கிய நிகழ்ச்​சி​யான மகிஷா சூரசம்​ஹாரம் அக். 2-ம் தேதி நடை​பெறுகிறது.

கொடியேற்​றத்தை முன்​னிட்டு நேற்று அதி​காலை 2 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டு, பல்​லக்​கில் கொடிப்​பட்​டம் வீதி​யுலா வந்து கோயிலை சேர்ந்​தது. பின்​னர், சன்​ன​திக்கு எதிரே​யுள்ள கொடி மரத்​தில் அதி​காலை 5.36 மணிக்கு ‘ஓம் காளி ஜெய் காளி’ என்ற பக்தி கோஷம் விண்​ணைப் பிளக்க கொடியேற்​றம் நடை​பெற்​றது. தொடர்ந்​து, கொடி மரத்​துக்கு பால், பன்​னீர், சந்​தனம் உள்​ளிட்ட 16 வகை​யான பொருட்​களால் அபிஷேகம் மற்​றும் தீபா​ராதனை நடை​பெற்​றது. இதில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்​டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow