‘சிந்து நதி நீரை நிறுத்தினால்...’ - பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர் இந்தியாவுக்கு மிரட்டல்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயன்படுத்தியதைப் போன்ற ஒரு மொழியைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

May 23, 2025 - 12:35
 0  3
‘சிந்து நதி நீரை நிறுத்தினால்...’ - பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர் இந்தியாவுக்கு மிரட்டல்

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயன்படுத்திய அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது. இந்தச் சூழலில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் போது அகமது ஷெரீப் சவுத்ரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய ஷெரீப் சவுத்ரி, “எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம்” என்று கூறியுள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow