சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகல தொடக்கம்: பக்தர்கள் விடிய விடிய தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பல்வேறு அமைப்பினர், கிராமத்தினர் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

Mar 10, 2025 - 01:15
 0  4
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகல தொடக்கம்: பக்தர்கள் விடிய விடிய தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பல்வேறு அமைப்பினர், கிராமத்தினர் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

அம்மன் திருத்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. எனினும், பூச்சொரிதல் விழா முக்கியத்துவம் வாய்ந்தது. உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்கவும், அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது இந்த விழாவின் சிறப்பம்சம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow