சபரிமலையில் ஆந்திர பக்தர்களின் வருகை அதிகரிப்பு - மூலிகை குடிநீர் வழங்கல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆந்திரா, தெலுங்கானா பக்தர்களின் வருகை வெகுவாய் அதிகரித்துள்ளது. காத்திருக்கும் பக்தர்களுக்கு புத்துணர்வு அளிக்க மூலிகை குடிநீர் மற்றும் பிஸ்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆந்திரா, தெலங்கானா பக்தர்களின் வருகை வெகுவாய் அதிகரித்துள்ளது. காத்திருக்கும் பக்தர்களுக்கு புத்துணர்வு அளிக்க மூலிகை குடிநீர் மற்றும் பிஸ்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிச.26-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 15-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட நெரிசல் மற்றும் அதிருப்தியை சரி செய்யும் வகையில் தேவசம்போர்டு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
What's Your Reaction?