சபரிமலை ஐயப்பன் கோயிலில் மார்ச் 14-ல் மாத பூஜைக்காக நடை திறப்பு: விரைவு பாதை வசதி அறிமுகம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட உள்ளது. இதில் ஐயப்பனை கூடுதலாக நேரம் தரிசிக்கும் வகையில், விரைவு பாதை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட உள்ளது. இதில் ஐயப்பனை கூடுதலாக நேரம் தரிசிக்கும் வகையில், விரைவு பாதை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர, சித்திரை விஷூ, திருவோணம் உள்ளிட்ட பல்வேறு காலங்களில் நடை திறக்கப்படுவது வழக்கம். இது தவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 5 நாட்கள் வழிபாடு நடைபெறும். வரும் 15-ம் தேதி மீன மாதத்துக்காக (பங்குனி) வரும் 14-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட உள்ளது.
What's Your Reaction?