கோவை வளர்ச்சிக்கான ‘மாஸ்டர் பிளான்’ வெளியிடுவதில் தாமதம் - முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கோவையின் வளர்ச்சிக்கு உதவும் ‘மாஸ்டர் பிளான்’ அறிக்கை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை விரைவுபடுத்தி வெளியிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: கோவையின் வளர்ச்சிக்கு உதவும் ‘மாஸ்டர் பிளான்’ அறிக்கை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை விரைவுபடுத்தி வெளியிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் தொழில் துறை மட்டுமின்றி அனைத்துவித துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாக கோவை உள்ளது. கோவையின் வளர்ச்சிக்கு ஏற்பவும், மக்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் மக்கள் நலன் சார்ந்த எதிர்கால திட்டமிடல்களுக்கும் ‘மாஸ்டர் பிளான்’ (முழுமைத் திட்டம்) என்பது மிக முக்கியமானது. நகரின் எதிர்கால வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில், ‘மாஸ்டர் பிளான்’ முக்கியப் பங்காற்றுகிறது.
What's Your Reaction?