‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

May 12, 2025 - 07:05
 0  4
‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை: ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். செவ்வாய்க்கிழமை (மே.12) அதிகாலை 6 மணி அளவில் மதுரை - ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்த நிகழ்வின்போது லட்சோப லட்சம் மக்கள் கள்ளழகரை தரிசித்து வழிபட்டனர்.

மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா மே 8-ல் தொடங்கியது. முதல் நாள், இரண்​டாம் நாள் மாலை​யில் சுந்​தர​ராஜ பெரு​மாள் தோளுக்​கினி​யானில் எழுந்​தருளி​னார். மூன்​றாம் நாளான நேற்று முன்​தினம் காலை​யில் தோளுக்கினியானில் சுந்​தர​ராஜபெரு​மாள்திருக்​கல்​யாண மண்​டபத்​தில் எழுந்​தருளி​னார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow