‘குதிரை பந்தய’த்தில் ஓடத் தேவையில்லை! | மனதின் ஓசை 13
ஒரு மனிதனின் சுபாவத்துக்குத் தகுந்தாற்போல் அவர் மனப்பதற்றத்தை எதிர்கொள்ளும் பக்குவம் மாறுபடுகிறது. பெரும் பாலானோர் ஏதோ ஒரு வகையில் அதைக் கடந்து செல்கின்றனர். சிலர் எளிதில் மனப்பதற்றத்துக்கு ஆளாகின்றனர்.

அதீத வேலைப்பளுவால் பதற்ற மனநிலைக்குத் தள்ளப்பட்ட குமார், அவர் வெளிப்படுத்திய அறிகுறிகள் என்ன என்பதைப் பற்றிக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். ஒரு மனிதனின் சுபாவத்துக்குத் தகுந்தாற்போல் அவர் மனப்பதற்றத்தை எதிர்கொள்ளும் பக்குவம் மாறுபடுகிறது. பெரும் பாலானோர் ஏதோ ஒரு வகையில் அதைக் கடந்து செல்கின்றனர். சிலர் எளிதில் மனப்பதற்றத்துக்கு ஆளாகின்றனர்.
மாறும் சூழல்: மனிதன் ஒரு சமூக விலங்கு என்பது பற்றி நாம் முன்னரே பேசி இருக்கிறோம். சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் தனது ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் மூலம் சூழலை மாற்றுவதும் மனித குலத்தின் முக்கியமான வளர்ச்சிப் போக்கு. ஆனால், இன்றைய சூழலில் பணியும் பணி சார்ந்த பாரமும் அதிகமாகிவிட்டன.
What's Your Reaction?