“காளைகளை அடக்க 19 வயது வரும் வரை காத்திருந்தேன்” - சிறந்த மாடுபிடி வீரர் பார்த்திபன் பகிர்வு
காளைகளை அடக்குவதற்காக 19 வயது வரும் வரை காத்திருந்தேன். பங்கேற்ற முதல் போட்டியிலேயே பரிசு வென்றது மகிழ்ச்சியாக இருப்பதாக பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் கூறினார்.

காளைகளை அடக்குவதற்காக 19 வயது வரும் வரை காத்திருந்தேன். பங்கேற்ற முதல் போட்டியிலேயே பரிசு வென்றது மகிழ்ச்சியாக இருப்பதாக பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது: “எனக்கு பெற்றோர் இல்லை. 19 வயதுக்காக காத்திருந்தேன். அதற்கு முன்பு 2 ஆண்டுகள் வடமாடு மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்று பயிற்சி பெற்றேன். எனது மாமா பாரதி மற்றும் உறவினர்கள் அளித்த உற்சாகத்தில் முதல்முறையாக பங்கேற்று கார் பரிசு பெற்றது சந்தோஷமாக உள்ளது. எனக்கு ஓட்டுக்கூரை வீடு தான் உள்ளது. நான் தேங்காய் மட்டை உரிக்கும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு பரிசாக கிடைத்த கார் மூலம் வருவாயை பெருக்கி சொந்த வீடு கட்ட முயற்சிப்பேன். சிலர் படித்து ஊருக்கு பெருமை சேர்ப்பர். நான் வீரவிளையாட்டில் பங்கேற்று ஊருக்கு பெருமை சேர்த்துள்ளேன்” என்று கூறினார்.
What's Your Reaction?