காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைப்பு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கோடை மழை மற்றும் காற்றி ன் வேகம் அதிகரித்ததன் காரணமாக காற்றாலையில் மின்னுற்பத்தி அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அனல் மின் நிலையத் தில் மூன்றில் ஒரு பங்குதான் மின் உற்பத்தி நடந்து வருகிறது

May 20, 2025 - 18:50
 0  3
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைப்பு

மேட்டூர்: தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கோடை மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக காற்றாலையில் மின்னுற்பத்தி அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மூன்றில் ஒரு பங்குதான் மின் உற்பத்தி நடந்து வருகிறது.

தமிழகத்தில் மேட்டூர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும் போது, அனல் மின் நிலையங்கள், முழு திறனுடன் மின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்சாரப் பயன்பாடு குறைந்துள்ளது. அதே நேரத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow