காய்கறி விவசாயத்தை மேம்படுத்த இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு @ திண்டுக்கல்
இந்தியா - இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தும் உயரிய நவீன தொழில்நுட்பம் குறித்த, “திறந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட காய்கறி சாகுபடி முறை” கருத்தரங்கம், திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள இந்தியா - இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தில் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்: இந்தியா - இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தும் உயரிய நவீன தொழில்நுட்பம் குறித்த, “திறந்த மற்றும் பாதுகாக்கப்பட்ட காய்கறி சாகுபடி முறை” கருத்தரங்கம், திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள இந்தியா - இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை, மத்திய அரசின் மத்திய நிறுவன மேம்பாட்டு நிறுவனம், இஸ்ரேல் தூதரகம் சார்பில் இந்தியா - இஸ்ரேல் வேளாண் மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட மற்றும் திறந்தவெளி காய்கறி சாகுபடி குறித்து மூன்று நாள் கருத்தரங்கம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள காய்கறி மகத்துவ மையத்தில் இன்று துவங்கியது.
What's Your Reaction?