காயல்: திரைப் பார்வை | ஒரு கடலோரப் பயணத்தின் காதல் சுனாமி!
கீழ்மைகளில் அதிகமும் புரண்டு, உருண்டுகொண்டிருந்த மனிதச் சமூகத்தைக் கைதூக்கி விட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காதலர்கள் கார்ல் மார்க்ஸும் ஜென்னியும்.

கீழ்மைகளில் அதிகமும் புரண்டு, உருண்டுகொண்டிருந்த மனிதச் சமூகத்தைக் கைதூக்கி விட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காதலர்கள் கார்ல் மார்க்ஸும் ஜென்னியும்.
அவர்களைப் போல், ‘மகிழ்ச்சி, சோகம், சிரிப்பு, கண்ணீர், வாழ்க்கை, மரணம்னு எல்லாத்துலயும் உன்கூட இருக்கணும்’ எனத் தன் காதலனைப் பார்த்துச் சொல்கிறாள் தேன்மொழி (காயத்ரி சங்கர்). காயல் நிலத்தோரம் தனக்கென ஒரு கூடுகட்டி, கடற் காற்றின் ஈரம் தழுவ அமைதியாக வாழ விரும்பும் அவளை ஒரு தேவதை (தேவதை என்பதைத் தூய உள்ளம் கொண்ட பெண் அல்லது ஆண் எனக் கொள்க) எனலாம்.
What's Your Reaction?