காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் ராணுவத்தின் 4 பெண் வீரர்கள் விடுதலை
காசாவில் கடந்த 15 மாதங்களாக பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் ராணுவத்தின் 4 பெண் வீரர்களை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுவித்தனர்.

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட கத்தார் மற்றும் அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இருதரப்பு இடையே கடந்த 19-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விடுவித்தனர். பதில் நடவடிக்கையாக பாலஸ்தீன கைதிகள் 95 பேரை இஸ்ரேல் விடுவித்தது.
இந்நிலையில் மேலும் 4 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேற்று விடுவித்தனர். கரீனா ஆரீவ் (20), டேனிலா கிலோபா(20), நாமா லெவி (20), லிரி அல்பாக் (19) ஆகிய நான்கு பெண்களும் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றினர்.
What's Your Reaction?