கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

மதுரை: மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.
கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி எழுந்தருளினார்.
What's Your Reaction?