கலைவாணர் அரங்கில் 15 நாட்கள் தேசிய கைத்தறி கண்காட்சி: 50 சதவீதம் தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை
தீபாவளியை ஒட்டி கலைவாணர் அரங்கில் 15 நாட்கள் நடைபெற உள்ள தேசிய கைத்தறி கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் 50 சதவீதம் தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை: தீபாவளியை ஒட்டி கலைவாணர் அரங்கில் 15 நாட்கள் நடைபெற உள்ள தேசிய கைத்தறி கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் 50 சதவீதம் தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கைத்தறி துணி வகைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கு கைத்தறி துறையால் தேசிய கைத்தறி கண்காட்சியை சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து இந்த கண்காட்சியில், கைத்தறி நெசவாளர்களின் கைவண்ணங்களால் தனித்துவத்துடன் நெசவு செய்யப்பட்ட பேஸ்டல் கலெக் ஷன்ஸ், பூம்பட்டு, புதுமணப்பட்டு, பட்டு நூல் டிசைனர் சேலைகள், கட்டம் பட்டு, வெண்ணிலா கலெக் ஷன்ஸ், அனுதினப்பட்டு, பருத்தி நூல் யோகா மேட், தர்ப்பை புல் யோகா மேட், தாய்-சேய் பெட்டகம் போன்ற புதிய வடிவமைப்பு ரகங்களை அறிமுகம் செய்து விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
What's Your Reaction?