கரடிகளின் தொடர்பு மொழி | உயிரினங்களின் மொழி - 21
ஒலிக்கு இருக்கும் முக்கியத்துவம் உடல்மொழிக்கும் உள்ளது. கரடிகளின் உடல்மொழி அவற்றின் மனநிலையையும் நோக்கங்களையும் தெரிவிக்கும் முக்கிய வழி. ஓய்வாக இருக்கும் கரடி, சாவகாசமாக உட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டு சுற்றுப்புறத்தைக் கவனிக்கும். அதே பின்னங்கால்களில் கரடி நின்றால், விழிப்புணர்வோடு அல்லது ஆர்வத்தோடு இருக்கிறது என்று அர்த்தம். கரடிகள் கவனமாக இருக்கும் போது, காதுகள் நிமிர்ந்து நிற்கும். அதே நேரம் காதுகள் தட்டையாக இருந்தால் அது பயத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். காதுகளைப் போல் வாலின் மூலமும் தொடர்பு மொழியைப் புரிந்துகொள்ளலாம். வால் நி

கரடிகள் பெரும்பாலும் தனிமையை விரும்பும் விலங்குகள். ஒலி, உடல் மொழி, வாசனை மூலம் கரடிகள் தம் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன. ஆராய்ச்சியாளர் கேரி பிரவுன், கரடிகள் பதினோரு விதமான ஒலிகளை வெளியிடுவதாகக் கண்டறிந்துள்ளார்.
கரடிகளின் ஒலி தொடர்பு முறையை மூன்றாகப் பிரிக்கலாம். முதல் நிலையில், நாக்கைச் சொடுக்கும் ஒலியும் முணுமுணுப்பும் அடங்கும். கரடி அமைதியான சூழ்நிலைகளில் இருக்கும் போது இந்த ஒலிகளைப் பயன்படுத்தப்படுகிறது. தாய் கரடிகள் தமது குட்டிகளுடன் பேசுவதற்கும், இணைகளுடன் தொடர்பு கொள்வதற்கும் நாக்கைச் சொடுக்கும்.
What's Your Reaction?