ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகை காணிக்கை அளிக்கும் பக்தர்
திருப்பதி ஏழுமலையானுக்கு விரைவில் 121 கிலோ தங்க நகைகளை பெயர் வெளியிட விரும்பாத ஒரு பக்தர் காணிக்கையாக வழங்க உள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி முதல் ரூ150 கோடி என கூறப்படுகிறது.

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு விரைவில் 121 கிலோ தங்க நகைகளை பெயர் வெளியிட விரும்பாத ஒரு பக்தர் காணிக்கையாக வழங்க உள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி முதல் ரூ150 கோடி என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ஏழுமலையானின் தீவிர பக்தர்களில் ஒருவர் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அதில் அவர் அதிக லாபத்தை ஈட்டினார். 60 சதவீத விற்பனையிலேயே அவருக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை லாபம் கிடைத்தது. இதனால் அந்த பக்தர், இதெல்லாம் திருப்பதி ஏழுமலையானின் கருணை என்பதை உணர்ந்து, ஏழுமலையானுக்கு 121 கிலோ எடையில் தங்க ஆபரணங்களை வழங்க முடிவு செய்தார்.
What's Your Reaction?