ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ் பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இஃபுராஹீம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851ம் ஆண்டு சந்தனக் கூடு சமூக நல்லிணக்க திருவிழா ஏப்.29ம் தேதி புகழ்மாலை எனப்படும் மவ்லீது ஷரீப்புடன் தொடங்கியது

ஏர்வாடி தர்ஹா 851ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ் பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இஃபுராஹீம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் 851ம் ஆண்டு சந்தனக் கூடு சமூக நல்லிணக்க திருவிழா ஏப்.29ம் தேதி புகழ்மாலை எனப்படும் மவ்லீது ஷரீப்புடன் தொடங்கியது. அதனையடுத்து மே 9ல் கொடியேற்றம் நடைபெற்றது.
What's Your Reaction?