ஏப்ரல் முழுவதும் வானம் கலைத் திருவிழா!
கலை, இலக்கியச் செயல்பாடுகளில் செறிவான வரலாற்றைக் கொண்டவர்கள் தலித்துகள் என்கிற பிரகடனத்தோடு நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்பதில்தான் நீலம் பண்பாட்டு மையத்தின் தனித்துவமும் தேவையும் இருக்கிறதெனக் கருதுகிறோம்.

திரைப்பட இயக்குநர், சமூகக் கலை, இலக்கியச் செயற்பாட்டாளர் என இருவேறு தளங்களில் இயங்கி வருபவர் பா.இரஞ்சித். அவர் நிறுவிய நீலம் பண்பாட்டு மையம், அண்ணல் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடி வருகின்றனர்.
‘கலை மக்களுக்கானது, கவனிக்கப்படாத கலைஞர்கள், கலைகளை கவனப்படுத்துவதும், அங்கீகாரம் கொடுப்பதும் நம் கடமை’ என்கிற முனைப்போடு கலை மற்றும் இலக்கிய விழாவாக கடந்த 5 ஆண்டுகளாக ‘வானம்’ கலைத் திருவிழாவை நீலம் பண்பாட்டு மையம் வழியாக முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் பா.இரஞ்சித்.
What's Your Reaction?