எம்எஸ்எம்இ கடன் உத்தரவாத திட்டத்தை அறிமுகம் செய்தார் நிர்மலா சீதாராமன்
எம்எஸ்எம்இ கடன் உத்தரவாத திட்டத்தை நேற்று அறிமுகம் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூலதன செலவுக்கான இலக்கு 10.2% அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதுடெல்லி: எம்எஸ்எம்இ கடன் உத்தரவாத திட்டத்தை நேற்று அறிமுகம் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூலதன செலவுக்கான இலக்கு 10.2% அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) பரஸ்பர கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார். அப்போது இந்த திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு அனுமதி கடிதங்களை அவர் வழங்கினார். இதன்படி, எம்எஸ்எம்இ நிறுவனங்கள், இயந்திரங்கள் வாங்க ஈட்டுப் பிணையம் அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதம் இல்லாமல் ரூ.100 கோடி வரை கடன் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?