சீனா+1 உத்தியால் இந்தியா பயனடையும்: மூடிஸ் நிறுவன அறிக்கையில் தகவல்
உலகளாவிய நிறுவனங்களின் சீனா ப்ளஸ் ஒன் உத்தியால் இந்திய துறைமுகங்கள் அதிக அளவில் நன்மைகளைப் பெறும் என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: உலகளாவிய நிறுவனங்களின் சீனா ப்ளஸ் ஒன் உத்தியால் இந்திய துறைமுகங்கள் அதிக அளவில் நன்மைகளைப் பெறும் என்று சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மூடிஸ் மேலும் கூறியுள்ளதாவது: சீனா ப்ளஸ் ஒன் உத்தியின்படி உலகளாவிய நிறுவனங்கள் சீனாவுக்கு அப்பால் இந்தியாவில் தங்களது உற்பத்தி மையம் மற்றும் விநியோக நெட்வொர்க்குகளை பன்முகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதனால், இந்திய துறைமுகள் பெரிதும் பயனடையக்கூடும். அதேநேரம், சீன துறைமுகங்கள் உடனடி நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
What's Your Reaction?