உலக நன்மை வேண்டி பழநியில் ஜப்பானியர்கள் 18 சித்தர்களுக்கு சிறப்பு யாகம்
பழநியில் புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உலக நன்மை வேண்டி 18 சித்தர்களுக்கு சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர்.

பழநி: பழநியில் புலிப்பாணி ஆசிரமத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உலக நன்மை வேண்டி 18 சித்தர்களுக்கு சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலையடிவாரத்தில் போகர் சித்தரின் சீடரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி மற்றும் ஆசிரமம் உள்ளது. இங்கு இன்று வெள்ளிக்கிழமை (பிப்.7) காலை உலக நன்மை வேண்டி, ஶ்ரீலஶ்ரீ சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால் பிள்ளை முன்னிலையில் 18 சித்தர்களுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
What's Your Reaction?