இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் 30 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் காசாவில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்களும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

காசா: இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்களும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அக்டோபர் 5ம் தேதி முதல் இஸ்ரேலிய ராணுவம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று இரவு முதல் நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய ஊடகங்களும் மருத்துவர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?