இயக்குநர் ஷங்கரின் ஒரு கருத்து என்னை ஆழமாக பாதித்தது: எடிட்டர் ரூபன் பகிர்வு
இயக்குநர் ஷங்கரின் ஒரு கருத்து தன்னை ஆழமாக பாதித்ததாக எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார். மும்பையில் பன்வெல் வளாகத்தில் நடந்த திரைப்பட விழா நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரூபன், மாணவர்களின் கேள்விகளுக்கு கலகலப்பாக பதிலளித்தார்.

இயக்குநர் ஷங்கரின் ஒரு கருத்து தன்னை ஆழமாக பாதித்ததாக எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார். மும்பையில் பன்வெல் வளாகத்தில் நடந்த திரைப்பட விழா நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரூபன், மாணவர்களின் கேள்விகளுக்கு கலகலப்பாக பதிலளித்தார். ”நேர்மையாகச் சொன்னால் நான் எடிட்டராக ஆனது ஒரு விபத்தே” என்று தன் ஆரம்ப கால நாட்களை அவர் நினைவுகூர்ந்தார்.
”நான் பெரிய புத்திசாலி மாணவன் இல்லை. சோம்பேறியாக இருந்தேன்; தேர்வுக்கு முன் நண்பர்கள் சொல்வதையே நம்பியிருந்தேன்” என்று சிரித்துக்கொண்டு கூறினார். ஆனால் தனக்கு கவனிக்கும் திறன் அதிகம்; அதுதான் தனக்கு உதவியது என குறிப்பிட்டார். கல்லூரியில் இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருந்தாலும், விதி அவருக்கு வேறு பாதையை காட்டியது.
What's Your Reaction?