இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை உச்சியில் மகா தீப தரிசனம்
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. நடப்பாண்டு திருவிழா கடந்த 1-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
What's Your Reaction?