இந்தியாவுக்கு போட்டியாக உலக நாடுகளுக்கு அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்புகிறது பாகிஸ்தான்
இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாகிஸ்தான் வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புகிறது. ஒன்பது பேர் கொண்ட இந்தக் குழுவுக்கு முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமை தாங்குவார்.

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாகிஸ்தான் வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புகிறது. ஒன்பது பேர் கொண்ட இந்தக் குழுவுக்கு முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமை தாங்குவார்.
ஏப்ரல் 22ல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது. சில நாட்கள் போர் பதற்றம் நீடித்த நிலையில், பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை உலக நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது.
What's Your Reaction?