“இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்?” - ட்ரம்ப் கேள்வி
“இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது.” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்: “இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது.” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அண்மையில் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) வெளிநாடுகளுக்கு அளித்து வரும் நிதி உதவியில் சுமார் 723 மில்லியன் டாலர்களை குறைத்துள்ளதாக அறிவித்தது. இதில் இந்தியாவுக்கு வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் டாலர் நிதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசுத் துறையின் இந்த நகர்வை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரித்துள்ளார்.
What's Your Reaction?