இந்தியாவுக்கு 131 மில்லியன் டாலர் மதிப்பிலான கடல்சார் பாதுகாப்பு மென்பொருள், உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

இந்தோ-பசிபிக் கடல்சார் விழிப்புணர்வு தொடர்பான 131 மில்லியன் டாலர் மதிப்புள்ள மென்பொருள் மற்றும் உபகரணங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

May 3, 2025 - 07:10
 0  5
இந்தியாவுக்கு 131 மில்லியன் டாலர் மதிப்பிலான கடல்சார் பாதுகாப்பு மென்பொருள், உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

புதுடெல்லி: இந்தோ-பசிபிக் கடல்சார் விழிப்புணர்வு தொடர்பான 131 மில்லியன் டாலர் மதிப்புள்ள மென்பொருள் மற்றும் உபகரணங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடல் கண்காணிப்பு மென்பொருள், தொழில்நுட்ப உதவி கள குழு பயிற்சி, தொலைதூர மென்பொருள், பகுப்பாய்வு ஆதரவு, தளவாட மற்றும் திட்ட ஆதரவின் பிற தொடர்புடைய உபகரணங்களை அமெரிக்கா வழங்க வேண்டும் என இந்தியா சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், 131 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த கொள்முதலுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow