இதற்குத் தயங்க வேண்டாம்! | மனதின் ஓசை 1
அண்மைக் காலமாக, ஒரு மனிதனின் வெற்றி தோல்விக்கு அந்தத் தனிமனிதனே காரணம் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. இதனால் குழு செயல் பாட்டினைப் புறந்தள்ளி தனி நபர் முன்னேற வேண்டும் என்கிற அழுத்தம் அனைவருக்கும் பரவலாக உள்ளது.

அண்மைக் காலமாக, ஒரு மனிதனின் வெற்றி தோல்விக்கு அந்தத் தனிமனிதனே காரணம் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. இதனால் குழு செயல் பாட்டினைப் புறந்தள்ளி தனி நபர் முன்னேற வேண்டும் என்கிற அழுத்தம் அனைவருக்கும் பரவலாக உள்ளது.
இந்நிலையில் வெற்றியால் ஏற்படும் மகிழ்ச்சியையும் மனநிறை வையும் கையாளத் தெரிந்த ஒருவரால் தோல்வியைக் கையாள முடியாமல் போகிறது. தோல்வியின்போது ஏற்படும் ஒருவிதப் பதற்றமும் மன உளைச்சலும் ஒருவரைப் பின்னிழுக்கின்றன. தோல்விக்கான பல்வேறு காரணி களைப் புரிந்துகொண்டு, தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்வதும் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வும் ஒருவருக் குச் சவாலான காரியங்களாக மாறி விடுகின்றன.
What's Your Reaction?