ஆரியங்காவில் சாஸ்தாவுடன் புஷ்கலாதேவி ஐக்கியமாகும் வைபவம்

கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மாம்பழத்துறையில் இருந்து மணமகள் அழைப்பு ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. இது அம்மனை ஜோதி ரூபமாக ஆரியங்காவுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியாகும்.

Dec 31, 2024 - 16:40
 0  4
ஆரியங்காவில் சாஸ்தாவுடன் புஷ்கலாதேவி ஐக்கியமாகும் வைபவம்

கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மாம்பழத்துறையில் இருந்து மணமகள் அழைப்பு ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. இது அம்மனை ஜோதி ரூபமாக ஆரியங்காவுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியாகும்.

ஆரியங்காவில் பாரம்பரிய முறைப்படி ஜோதி ரூப தரிசனம், `பாண்டியன் முடிப்பு' எனும் நிச்சயதார்த்த விழா, ஊஞ்சல் உற்சவம், திருக்கல்யாணம், மண்டலாபிஷேகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த புஷ்கலாதேவியின் ஆத்ம பக்தியை மெச்சி, அவரை ஐயப்பன் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டதாக ஐதீகம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow