ஆடுகளத்துக்கு திரும்பிய முகமது ஷமி: ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறார்
நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் இந்தூரில் நடைபெறும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் வங்காள அணிக்காக விளையாடி வருகிறார் பந்து வீச்சாளர் முகமது ஷமி.

இந்தூர்: நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் இந்தூரில் நடைபெறும் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் வங்காள அணிக்காக விளையாடி வருகிறார் பந்து வீச்சாளர் முகமது ஷமி. இதன் மூலம் சுமார் ஓராண்டுக்கு பிறகு கிரிக்கெட் களத்துக்கு அவர் திரும்பியுள்ளார்.
கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதன் பின்னர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார். இந்த நிலையில் தான் ரஞ்சி கோப்பையில் அவர் விளையாடுகிறார்.
What's Your Reaction?